வான் நிலவு தான்

புகைப்படம் (2010)
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: ராஜேஷ் லிங்கம் Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

வான் நிலவு தான் அருகிலே இதோ
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன்
ஓ வான் நிலவு தான் அருகிலே இதோ
ஓ ஹோ ஹோ ஹோ

காற்றோடு கை வீசி நீ பேசும் போது
மெழுகாக நான் மாறுவேன்
நீ போன பின்னாலும் நீ நின்ற இடத்தில்
உன் வாசம் நான் தேடுவேன்
உன்னுடன் நான் வாழும் இரவென்றும் பெண்ணே
விடிந்திட கூடாதடி
உதடு வரைக்கும் ஒரு வார்த்தை
நெருங்கி வந்த பின்னாலும்
தயக்கம் வந்து தூண்டில் போட்டு இழுக்கும்
உனது அருகில் இருக்கும் இந்த நிமிடம் போதும்
வேறென்ன நான் கேட்கிறேன்

வான் நிலவு தான் அருகிலே இதோ

அதிகாலை பனி தூங்கும் கண்ணாடி கதவில்
உன் பேரை நான் தீட்டுவேன்
ஆள் யாரும் இல்லாத இடம் தேடி சென்று
உன்னை போல நான் பேசுவேன்
உன் விரல் தொடுகின்ற இளம் சூட்டில் பெண்ணே
இரவினில் குளிர் காய்கிறேன்
கருவில் வாழும் நாள் கூட
பத்து மாதம் வரை தானே
காதல் நெஞ்சம் ஆயுள் முழுதும் சுமக்கும்..
உனது அருகில் இருக்கும் இந்த நிமிடம் போதும்
வேறென்ன நான் கேட்கிறேன்

வான் நிலவு தான் அருகிலே இதோ..
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன் ஹோ..
ர ர ர ர ர ர ..

[youtube=http://www.youtube.com/watch?v=Udmo3c9W9CM]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*