படித்ததில் பிடித்தது – 7

படித்ததில் பிடித்தது

Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

கனவு கண்டது போல்
கையில் குடையோடு வந்திருந்தாய்
உன்னை ஏமாற்ற மனமில்லாமல்
இறங்கி வந்தது மழையும்.
நீர்த் தாரைகளைச் சொடுக்கி
உன்னோடு என்னையும்
கரைத்துவிடுவது போல்
அடைத்துப் பெய்தது
அந்த அந்தி மழை.
சிரித்துக் கொண்டுபோய் மலர்த்தி
நீ பரிசளித்த குடையை
ஏந்திப் பிடித்துக்கொண்டு
கடலுக்குள் ஓடின அலைகள்.

உன்னைச் சந்திக்கும்போதெல்லாம்
தொலைபேசும் பேச்சிலெல்லாம்
கடிதம் எழுதும்போதெல்லாம்
உன்னைக் காதலிக்கிறேன்
காதலிக்கிறேன்
என்று மறுகுவேன்.

ஈரம் சொட்டச் சொட்ட
வெதுவெதுப்பான சொற்களில்
அன்றும் மறுகினேன்.

செய்துகொண்டிருப்பதை ஏன்
சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
என்ற செருக்கிலிருந்தாய்
வழக்கம் போல்.

எப்போதும் உன்னைக்
காதலித்தேன் நான்
‘எப்போதாவதுதான்’ என்றாய் நீ.

மழை திடுக்கிட்டு நின்றது
பொழுதும் இரவாகி உருவங்கள்
இருண்டன.

ஏழு சொட்டு மௌனத்திற்குப் பிறகு
வானம் ஒரு நீள மின்னல் கொடியை
நீட்டியதுபோது
நடுக்கடலில் மொட்டாகி நின்றது
உன் குடை.

நெஞ்சில் மஞ்சள் ஒளிவிரித்து
உன்னை நான் மறந்தும்
என்னை நீ மறந்தும்
ஒரு கணம் நேசித்தோம்
கடலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*